வடக்கின் பல பாகங்களில் இன்று வியாழக்கிழமை மின்சாரம் தடைப்படும் – மின்சாரசபை
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக இன்று வியாழக்கிழமையும் (30), காலை 8.00 மணியிலிருந்து மாலை 05.00 மணி வரை, மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 08.00மணி முதல் மாலை 05. 00மணி வரை யாழ். கொழும்புத்துறை ஒரு பகுதி, நெடுங்குளம் ஒரு பகுதி, உதயபுரம், மணியம் தோட்டம், மணியம் தோட்டம் ஐஸ் தொழிற்சாலை ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.