யாழ்.நாயன்மார்கட்டு பகுதியில் சிறுவன் மீது மோதிய கார்..! சிறுவன் படுகாயம், இளைஞர்கள் கூடியதால் பதற்றம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நாயன்மார்கட்டு பகுதியில் சிறுவன் மீது மோதிய கார்..! சிறுவன் படுகாயம், இளைஞர்கள் கூடியதால் பதற்றம்..

யாழ்.நாயன்மார்கட்டு பகுதியில் 11 வயது சிறுவன் மீது கார் மோதியதில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் சிறுவன் யாழ்.போதனா வைத்தியசா லையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இந்த சம்பவம் இன்று இரவு 8 மணியளவில் இடம் பெற்றுள்ளது. செம்மணி வீதியில் துவிச்சக்கர வ ண்டியில் பயணித்த சிறுவன் திடீரென ஒழுங்கை க்குள் திரும்ப முயற்சித்தபோது

சிறுவன் மீது வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பாவனையில் உள்ள கார் மோதியுள்ளது. இதனையடுத்து அந்த பகுதியால் சென்றவர்கள் உடனடியாகவே சிறுவனை மீட்டு 

வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இதனை யடுத்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கபட்ட நிலையில் சுமார் 1 மணித்தியாலத்தின் பின்பே பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். 

இதற்குள் அப்பகுதியில் இளைஞர்கள் கூடியதுடன் பதற்றமா ன சூழல் நிலவியது. எனினும் பொலிஸார் வந்து நிலமையை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இதேவேளை காரின் சாரதியை இளைஞர்கள் தேடி யதால் அங்கிருந்து சென்ற சாரதி யாழ்.பொலிஸ் நிலையத்தில் சரண்டைந்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு