யாழ்.தெல்லிப்பழை- வித்தகபுரம் பகுதியில் பொலிஸாா் அதிரடி முற்றுகை..! போதைப் பொருளுடன் ஒரு முஸ்லிம் பெண் உட்பட 4 போ் கைது..

ஆசிரியர் - Editor I
யாழ்.தெல்லிப்பழை- வித்தகபுரம் பகுதியில் பொலிஸாா் அதிரடி முற்றுகை..! போதைப் பொருளுடன் ஒரு முஸ்லிம் பெண் உட்பட 4 போ் கைது..

வலிகாமம் வடக்கு- வித்தகபுரம் பகுதியில் வியாபாரத்திற்காக ஹெரோயின் போதைப் பொரு ளை பக்கெட்டுக்களில் அடைத்துக் கொண்டிருந்தபோது பொலிஸாா் சுற்றிவளைத்ததில் 2 பெ ண்கள் மற்றும் 2 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். 

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றிணையடுத்து பொலிஸாா் வித்தகபுரம் பகுதி யில் உள்ள வீடொன்றை இன்று மாலை சுற்றிவளைத்தனா். இதன்போதே மேற்படி 4 போ் கைது செய்யப்பட்டிருப்பதுடன், 3 லட்சம் பெறுமதியான 5 கிராம் 6 மில்லிக்கிராம் அளவுள்ள

ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டள்ளது. மேலும் பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர் என்று அறிந்த சந்தேகநபர்கள் சுமார் 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மண்ணுக்குள் போட்டு கலந்துள்ளனர். மிகுதி பக்கட்டுக்களில் பொதி செய்யப்பட்ட ஹெரோயின் 

போதைப்பொருளே மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் வித்தகபுரத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ஆணும் 31 வயதுடைய பெண்ணும் கொழும்பு, மோதரையிலிருந்து வருகை தந்திருந்த 31 வயதுடைய முஸ்லிம் ஆணும் 25 வயதுடைய முஸ்லிம் பெண்ணும் 

அடங்குகின்றனர்.காங்கேசன்துறை பிராந்தியத்துக்கு பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சி.டபிள்யூ. சேனாதீர தலைமையிலான சிறப்பு பொலிஸ் குழுவினர் இன்று மாலை 3 மணியளவில் முன்னெடுத்த சுற்றுக்காவல் நடவடிக்கைகயின் போதே 

இந்த கைது இடம்பெற்றது. சந்தேகநபர்கள் தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் மீட்கப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு