யாழ்ப்பாணம்- சர்வதேச விமான நிலையத்திலும் பாதுகாப்பு பரிசோதனைகள் ஆரம்பம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம்- சர்வதேச விமான நிலையத்திலும் பாதுகாப்பு பரிசோதனைகள் ஆரம்பம்..!

யாழ்ப்பாணம்- சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வரும் பயணிகளையும் சிறப்பு பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஜசிங்க கூறியிருக்கின்றார். 

கொரொனா வைரஸ் தொற்று தொடர்பாக கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், 

கோரோனா வைரஸ் சிகிச்சை மற்றும் ஆய்வுகளை மேற்கொள்வதில் ஈடுபட்டுள்ள அனைத்து மருத்துவர்களுக்கும், பணியாளர்களுக்கும் தேவையான பாதுகாப்பு உடைகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்துக்கு வரும் விமான பயணிகளை சிறப்புப் பரிசோதனைக்கு உட்படுத்தும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கப்பல் மூலம் இலங்கைக்கு வரும் பயணிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

தற்பொழுது புதிய கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனையை பொரளையில் உள்ள மருத்துவ ஆய்வு நிறுவனத்தில் மேற்கொள்ள முடியும். இதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.புதிய கோரோனா வைரஸ் தொடர்பில் ப

ரிசோதனையை மேற்கொள்ளக்கூடிய மருத்துவ பரிசோதனை ஆற்றல் இலங்கை மற்றும் இந்தியாவின் புனே மாநிலத்தில் மாத்திரமே உள்ளன. இதேபோன்று அனைத்து மாகாண சுகாதார அதிகாரிகளுக்கும் புதிய கோரோனா வைரஸ் தொடர்பில் 

சிறப்பு ஆலோசனைகள் அடங்கிய சுற்றறிக்கை விநியோகிக்கப்பட்டுள்ளது – என்றார். நாட்டில் கொழும்பு உள்ளிட்ட அண்டிய பிரதேசங்களில் உள்ள விற்பனை நிலையங்களில் முகத்தை மறைப்பதற்காக பயன்படுத்தப்படும் முக மூடிகளை (Masks) 

பெற்றுக்கொள்வதில் சிரமம் உள்ளதாகவும் கருத்து தெரிவித்த சுகாதார பணிப்பாளர், இவற்றை தயாரிக்கும் 3 நிறுவனங்களுக்கு தமது தயாரிப்புக்களை அதிகரிப்பதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு