மறவன்புலவில் பொலிஸார் அடாவடி..! காற்றாலைக்கு எதிரான போராட்டங்களை நடாத்திய பிரதேசசபை உறுப்பினர் கைது..
மறவன்புலவு காற்றாலைக்கு எதிரான போராட்டங்க ளை முன் நின்று நடாத்திய சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
காற்றாலையை எதிர்த்து போராட்டம் நடாத்திய மக்களை வாள்களுடன் சென்று அச்சுறுத்தியவர் ங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
கைது செய்யப்பட்ட பிரதேசசபை உறுப்பினருடைய பிறந்த தினம் நேற்று என்பதால் அவருடை வீட்டில் பொதுமக்கள் பலர் கூடியிருந்த நிலையில் பொலிஸாரினால் மிக அடாவடியாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மக்கள் கூறுகையில், காற்றாலையை எதிர்த்து போராட்டம் நடாத்திய மக்களை வாளுடன் துரத்தி அச்சுறுத்திய ஒரு திருடன் மீது பொலிஸார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. நிலை இவ்வாறிருக்க
குறித்த நபரின் வீடு புகுந்து நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டதாகவுத் குறித்த தாக்குதலை பிரதேச சபை உறுப்பினரே நடத்தியதாகவும் குறித்த நபர் ங்கிய முறைப்பாட்டை தொடர்ந்து பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது முறைகேடானது. பொலிஸார் பக்கசார்பாக நடந்து கொள்ளுகின்றனர். என பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.