பப்ஜி கேம் ஆக்ரோசமாக விளையாடிய 25 வயது இளைஞர்!! -மூளை பக்கவாதத்தால் சாவு-

ஆசிரியர் - Editor III
பப்ஜி கேம் ஆக்ரோசமாக விளையாடிய 25 வயது இளைஞர்!! -மூளை பக்கவாதத்தால் சாவு-

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிகமாக பப்ஜி கேம் விளையாடிய இளைஞருக்கு மூளை பக்கவாதம் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள், இளம் பெண்களின் மத்தியில் பப்ஜி கேமின் மோகம் அதிகரித்துள்ளது. 

அவ்வகையில், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் ஆக்ரோஷமாக பப்ஜி விளையாடியபோது மூளை பக்கவாதம் ஏற்பட்டு பலியாகி உள்ளார்.

புனே அருகே உள்ள ஷிண்டேவாடி பகுதியைச் சேர்ந்த ஹர்ஷல் மீமான் என்ற அந்த இளைஞர், கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் பப்ஜி கேம் விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீரென பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. 

உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பரிசோதனையில் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. 

வைத்தியர்கள் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துபோனார். இந்த சம்பவத்தால் அவரது குடும்பமே சோகத்தில் ஆழ்ந்தது.

பிரேத பரிசோதனை அறிக்கையை மேற்கோள் காட்டி பொலிஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அதிக ஆர்வத்துடன் பப்ஜி கேம் விளையாடிக்கொண்டிருந்தபோது,  மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டதால் இளைஞர் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. 

இளைஞர்கள் பப்ஜி கேம் மட்டுமின்றி எந்த கேமாக இருந்தாலும் அதிக நேரம் விளையாடுவதை தவிர்க்க வேண்டும் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 

குழந்தைகள் அதிக நேரம் மொபைல் போன்களில் மூழ்கி கிடப்பதை பெற்றோர்கள் கண்காணித்து, மொபைல் போன் விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகளை விளக்கி கூற வேண்டும். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு