வல்வெட்டித்துறையில் வீடு ஒன்று முற்றுகை..! இளைஞன் கைது, பெருமளவு இராணுவம் குவிப்பால் பதற்றம்..
யாழ்.வல்வெட்டித்துறை பகுதியில் பெருமளவு இராணுவத்தினா் குவிக்கப்பட்டு வீடு ஒன்று திடீா் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகின்றது.
வடமராட்சி கிழக்கு- நாகா்கோவில் பகுதியில் இராணுவத்தினா் மீது தாக்குதல் நடாத்தியதாக தேடப்படும் முக்கிய இளைஞன் உள்ளிட்ட 6 போ் தங்கியிருப்பதாக இராணுவத்தினருக்கு
கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டினை பெருமளவு இராணுவத்தினருடன் இன்று பிற்பகல் இராணுவம் சுற்றிவளைத்து தேடுதல் நடாத்தியிருக்கின்றது.
இதன்போது இளைஞன் ஒருவனை இராணுவம் கைது செய்துள்ளதாக பொதுமக்கள் கூறியிருக்கின்றனா்.