மிருசுவில் பகுதியில் முதியவர் கொலை..! ஈ.பி.டி.பி அலுவலகத்தில் பணியாற்றும் பெண் கைது..
யாழ்.மிருசுவில்- ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் 56 வயதான முதியவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஈ.பி.டி.பி அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை மிருசுவில் பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டிருந்தது. இது குறித்து விசாரணை நடாத்திய பொலிஸார்குறத்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
மேலும் குறித்த முதியவர் தன் மீது பலாத்கார முயற்சி செய்தமையினாலேயே அவரை தான் தாக்கியதாக கைது செய்யப்பட்ட பெண் பொலிஸாருக்கு கூறியுள்ளார்.
இதேவேளை எழுதுமட்டுவாழ் படித்த மகளிர் திட்டத்தில் வாழும் இ.குபேந்திரன் (வயது- 56) என அடையாளம் காணப்பட்டிருப்பதுடன், அவருடைய கழுத்து, நெஞ்சு போன்றவற்றில் கூரிய ஆயுதத்தினால் குத்திய காயங்கள் காணப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.