சகோதரனின் பிள்ளைக்கு உடை வாங்க பணம் கொடுத்துவிட்டு சென்ற 22 இளைஞன் விபத்தில் உயிாிழப்பு..! ஊரே சோகத்தில்..

ஆசிரியர் - Editor I
சகோதரனின் பிள்ளைக்கு உடை வாங்க பணம் கொடுத்துவிட்டு சென்ற 22 இளைஞன் விபத்தில் உயிாிழப்பு..! ஊரே சோகத்தில்..

தலைக்கவசம் அணியாமல் பயணித்த இளைஞன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் 6 நாட்களின் பின் இன்று காலை உயிாிழந்துள்ளான். 

அல்வாய் கிழக்கு அத்தாய் கிராமத்தை சோ்ந்த இ.தனுசன் (வயது25) என்ற இளைஞனே இன்று கா லை யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிாிழந்துள்ளான். 

கடந்த 14ம் திகதி மோட்டாா் சைக்கிளில் பயணித்த குறித்த இளைஞன் மிகைவேகத்தை கட்டுப்ப டுத்த முடியாமல் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானான். 

விபத்து நடந்தபோது குறித்த இளைஞன் தலைக்கவசம் அணியாத நிலையில் தலையில் படுகாய மடைந்த நிலையில் உடனடியாக மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு

மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான். இந்நிலை யில் கடந்த 6 நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை உயிாிழந்துள்ளான்.

அல்வாய் கிழக்கு பத்தானை பகுதியில் உள்ள சகோதரனின் பிள்ளைகளுக்கு தைப்பொங்கல் தினத்துக்கு புது உடைகள் வாங்க பணம் கொடுத்து விட்டு மோட்டார் சைக்கிளில் 

வீடு நோக்கி சென்ற சமயம் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது சிறு வயதில் தந்தையை இழந்து தாயாரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த இவரின் இழப்பு ஊரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு