3 சிறுவர்கள் காணாவில்லை..! பொலிஸ், விசேட அதிரடிப்படை குவிப்பு. வடமராட்சிகிழக்கு- நாகர்கோவிலில் பதற்றம்..

ஆசிரியர் - Editor I
3 சிறுவர்கள் காணாவில்லை..! பொலிஸ், விசேட அதிரடிப்படை குவிப்பு. வடமராட்சிகிழக்கு- நாகர்கோவிலில் பதற்றம்..

யாழ்.நாகர்கோவில் பகுதியில் 3 சிறுவர்கள் காணா மல்போயிருக்கும் நிலையில் நேற்று இரவு தொடக்க ம் கிராமத்தில் தொடர்ந்து பதற்றமான நிலமை உரு வாகியிருப்பதுடன்,

பொலிஸார், பொதுமக்கள் இணைந்து தொடர்ச்சி யாக சிறுவர்களை தேடி வருகின்றனர். பத்து வயதைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களும் மற்றும் 17 வயதுடைய ஒருவருமாக மூன்று பேர் நேற்று இரவு காணாமல்ப் போயுள்ளதாக, 

பருத்தித்துறைப் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது, இதனையடுத்து பருத்தித்துறைப் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.

குறித்த சிறுவர்கள் வீட்டுக்கு செல்லாத்தையடுத்து ஊர் மக்கள், இளைஞர்கள் ஒன்று திரண்டு ஊரின் பல இடங்களிலும் தேடியும் மூவரும் கிடைக்காத்தை அடுத்து, பருத்தித்துறைப் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, 

இதனை அடுத்து பருத்தித்துறைப் பொலிசார் தற்போது நாகர்கோவில்ப் பகுதிக்குச் சென்று மீண்டும் அப் பகுதி மக்களுடன் இணைந்து தேடுதல் நடத்தி வருகின்றனர்.

கலியுகமூர்த்தி மதுசன் 10 வயது, புஸ்பகுமார் செல்வகுமார் 10 வயது, சந்தியோ தனுசன்  17 வயது மனநலம் குன்றியவர். ஆகியோரே காணாமல்போயுள்ளனர்.


குறிப்பு..

யாராவது தகவல் அறிந்தால் குறித்த இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்

0776954359

வேலுப்பிள்ளை கோபாலபிள்ளை

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு