யாழ்.நாகா்கோவிலில் படையினா் மீண்டும் அடாவடி..! இளைஞன் கைது, மேலும் சில இளைஞா்களுக்கு கடும் அச்சுறுத்தல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.நாகா்கோவிலில் படையினா் மீண்டும் அடாவடி..! இளைஞன் கைது, மேலும் சில இளைஞா்களுக்கு கடும் அச்சுறுத்தல்..

யாழ்.வடமராட்சி கிழக்கு நாகா்கோவில் பகுதியில் திடீா் சுற்றிவளைப்பை மேற்கொண்ட படையினா் இளைஞன் ஒருவனை கைது செய்துள்ளதுடன், 

மேலும் சில இளைஞா்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தியிருக்கின்றனா். கடந்த தைப் பொங்கல் தினத்தில் இராணுவத்தினருக்கும் நாகர்கோவில் இளைஞர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது. 

அன்றிரவு நால்வர் இராணுத்தால் கைது செய்யப்பட்ட நிலையில் 16/01/2020 அன்று மன்றில் முற்படுத்தப்பட்டு ஒருவர் விடுவிக்கப்பட்டிருந்தார். அன்றிரவிலிருந்து மறுநாள் இரவுவரை 

இராணுவம் வாகனங்கள் ஆட்களை சோதனை செய்து வந்தது. இந் நிலையில் இன்றைய தினம் விளையாட சென்ற இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 

கைது செய்யப் பட்டவரை பருத்தித்துறை பொலிசாரிடம் ஒப்படைக்க இராணுவம் நடவடிக்கைகள் மேற் கொள்வதாகவும் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆனந்தராசா சுரேஸ்குமார் தெரிவித்தார். 

மேலும் இருவர் இராணுவத்தால் மிரட்டப்பட்டு புகைப்படம் எடுக்கப்பட்ட நிலையில் விடுவிக்கபட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிதவதார், 

இவ்வாறான கைது நடவடிக்கைகளால் நாகர்கோவில் மக்கள் அச்சத்தில் உள்ளதாகவும் தெரிவிதவதார்

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு