காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களுக்கு உதவ நான் தயாா்..! தமிழ்தேசிய கூட்டமைப்பே தடையாம்.. ஜனாதிபதி ஐ.நாவுக்கு கருத்து..

ஆசிரியர் - Editor I
காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களுக்கு உதவ நான் தயாா்..! தமிழ்தேசிய கூட்டமைப்பே தடையாம்.. ஜனாதிபதி ஐ.நாவுக்கு கருத்து..

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு விசேட செயற்றிட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக கூறியிருக்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ தமிழ் தலைவா்கள் தடையா க உள்ளதாக குற்றஞ்சாட்டியிருக்கின்றாா். 

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி இல்லத்தில் வைத்து நேற்று சந்தித்துள்ளார். இதன்போதே குறித்த விடயத்தை ஜனாதிபதி கூறியதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பேண்தகு அபிவிருத்தி திட்டங்களுக்கு, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி பாராட்டு தெரிவித்துள்ளார். 

காணாமல்போனோர் தொடர்பான பிரச்சினை குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்ட நிலையில், காணாமல்போனோரின் குடும்பங்களின் வாழ்வாதார அபிவிருத்திகான செயன்முறை ஒன்றை தயாரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.   

தமது அரசியல் அபிலாஷைகளுடன் முரண்பட்டுள்ளமையினால், தமிழ் அரசியல்வாதிகள் அந்த நடவடிக்கைகளை நிராகரித்துள்ள போதிலும், பாதிப்புக்கு உள்ளான குடும்பங்களின் நலனுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 

இதேநேரம், வறுமை ஒழிப்பு, காலநிலை மாற்றம், அரச நிறுவனங்களை எண்மானமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. 

வறுமையை இல்லாதொழிப்பதே அரசாங்கத்தின் பிரதான குறிக்கோளாகும். குறைந்த வருமானமுடைய ஒரு இலட்சம் பேருக்கு தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தல் மற்றும் சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதற்காக மேற்கொள்ளப்படும் திட்டம் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதிக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.  

கல்வித்துறை, தகவல் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் அரச நிறுவனங்களின் எண்மாணமயமாக்கம் போன்ற செயற்பாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் உதவிகளை பெற்றுக்கொள்வதற்கு ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதி இதன்போது இணக்கம் வெளியிட்டுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு