வாள்கள், கத்திகளுடன் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையா்கள் கத்திமுனையில் துணிகர கொள்ளை..! யாழ்.புலோலியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
வாள்கள், கத்திகளுடன் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையா்கள் கத்திமுனையில் துணிகர கொள்ளை..! யாழ்.புலோலியில் சம்பவம்..

யாழ்.புலோலி பகுதியில் வீடொன்றுக்குள் வாள்கள், கத்திகளுடன் நுழைந்த கொள்ளையா்கள் சுமாா் 8 பவுண் தங்க நகைகளை கத்தி முனையில் கொள்ளையிட்டு சென்றிருக்கின்றனா். 

இந்தச் சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் பருத்தித்துறை புலோலியில் இடம்பெற்றதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.வீட்டில், உரிமையாளர்கள் இருந்த வேளை, 

இரவு ஏழு மணியளவில் முகத்தைத் துணிகளால் மறைத்துக் கட்டிக் கொட்டு உள் புகுந்த மூவர், கத்தியைக் காட்டி அச்சுறுத்தி, வீட்டில் இருந்தவர்கள் அணிந்திருந்ந நகைகைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு