பிரபாகரன் என்ற மிகப்பெரும் ஆளுமை..! தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வே.பிரபாகரனை புகழ்ந்த பிரதமா் மஹிந்த..

ஆசிரியர் - Editor I
பிரபாகரன் என்ற மிகப்பெரும் ஆளுமை..! தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வே.பிரபாகரனை புகழ்ந்த பிரதமா் மஹிந்த..

உலகில் மிகச்சிறந்த தற்கொலை தாக்குதல் அங்கி மற்றும் தற்கொலை தாக்குதல் படகுகளை உருவாக் கியவா் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வேலுப்பிள்ளை பிரபாகரன். தன்னிடமிருந்த சிறிய ரக விமானங்கள் மூலம் மிக துல்லியமான தாக்குதல்களையும் நடத்தி உலகை வியக்கவைத்தவா்.

மேற்கண்டவாறு பிரதமா் மஹிந்த ராஜபக்ச கூறியிருக்கின்றாா். திருகோணமலை- சீனன்குடா விமான படைத்தளத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவா் மேற்கண் டவாறு கூறியிருக்கின்றாா். இதன்போது பிரதமா் மேலும் கூறுகையில், 

உலகில் உள்ள எந்த பயங்கரவாதிகளிடமும் விமானப்படை இருந்ததில்லை இதில் விடுதலைப்புலிகள் அனுபவசாலிகள் சிறியவிமானங்களைப்பயன்படுத்தி மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்த முனைந்தவர்கள். அந்த காலங்களில் விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் 

குரும்பட்டித்தாக்குதல்கள் என குறிப்பிடுவதுண்டு. அந்த குரும்பட்டித்தாக்குதல்களை புலிகள் இரவு வேளைகளில் கரையோரமாக தாழ்ப்பறந்து வந்து மேற்கொண்டனர் அந்தக்குரும்பட்டி தாக்குதல் மூலம் கொலன்னாவ பெற்றோலிய சுத்திகரிப்பு நிலையம், கட்டுநாயக்க விமான நிலையம் போன்றவற்றில் 

பெரும் சேதங்களை ஏற்படுத்த முனைந்தனர் ஆனால் எமது விமானப்படை அதனை முறியடித்தனர். உலகின் மிகச்சிறந்த தற்கொலைத்தாக்குதல் அங்கி மற்றும் தற்கொலைத்தாக்குதல் படகுகளை உலகிற்கு அறிமுகம் செய்தவர் பிரபாகரன். அதன் மூலமே உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்க அரசாங்கத்தின் 

உளவுப் பிரிவான.எப்.பி.ஜ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகளின் பட்டியலில் இனைத்து அவ்வியக்கத்தைத் தடைசெய்தது. அதன் அடிப்படையில் அவர்கள் அழிவினை தேடிக்கொண்டனர். இன்று உலகில் பயங்கரவாதிகளால் யுத்தங்களை ஆரம்பிப்பதன் மூலம் மக்களின் அழிக்கின்றனர்.

இன்றும் உலகில் தீவிரவாதம் அதன் அழிவுகளை மிகச்சிறப்பாகச் செய்து கொண்டு உள்ளது.குறிப்பாக மத்தியகிழக்கில் சிறியா,ஈராக் போன்ற நாடுகளில் ஜ.எஸ்.ஜ.எஸ் என்கின்ற பயங்கரவாதிகள் அழிவுகளை மேற்கொள்வதன் மூலம் மக்களைக் கொல்கின்றனர் சொத்துக்களை அழிக்கின்றனர். 

அந்தவகையில் எமது இராணுவத்தைக் குறிப்பாக விமானப்படையைக் குறித்து நாம் பெருமை அடைய வேண்டும்இந்த விமானப்படை வீரர்களின் பயிற்சி நிறைவு நிகழ்வு குறித்த எமது ஜனாதிபதியும் நானும் பெருமையடைகிறேன் என்றாா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு