குழந்தை பெற்ற பின்னர் விளையாடும் சானியாவின் அசத்தல்!!

ஆசிரியர் - Editor III
குழந்தை பெற்ற பின்னர் விளையாடும் சானியாவின் அசத்தல்!!

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு சானியா மிர்சா ஜோடி தகுதி பெற்றுள்ளது.

ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. குழந்தை பெற்றுக் கொண்டதால் கடந்த 2 ஆண்டுகளாக டென்னிசை விட்டு விலகி இருந்த இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா இந்த போட்டியின் மூலம் மறுபிரவேசம் செய்துள்ளார்.


இந்த தொடரின் பெண்கள் இரட்டையர் பிரிவில், சானியா மிர்சா உக்ரைன் வீராங்கனையான நாடியா கிச்செனோக்குடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றார். 

லீக் போட்டிகளில் எளிதாக வென்ற சானியா மிர்சா ஜோடி, கால் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் வானியா கிங்-கிறிஸ்டினா மெக்ஹாலே ஜோடியை சானியா ஜோடி எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் அமெரிக்க ஜோடியை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு