பொங்குதமிழ் பிரகடனத்தின் 19ம் ஆண்டு நினைவேந்தல் இன்று நினைவுகூரப்பட்டது..!

ஆசிரியர் - Editor I
பொங்குதமிழ் பிரகடனத்தின் 19ம் ஆண்டு நினைவேந்தல் இன்று நினைவுகூரப்பட்டது..!

பொங்குதமிழ் பிரகடனத்தின் 19ம் ஆண்டு நினைவேந்தல் யாழ்.பல்கலைகழகத்தில் உள்ள பொங்குதமிழ் நினைவுதூபியில் இன்று காலை நினைவுகூரப்பட்டிருக்கின்றது. 

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கடந்த 2001 ஆம் ஆண்டு பொங்கு தமிழ் நடாத்தப்பட்டது. இதன்போது தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, 

மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டுமென பிரகடனம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த பிரகடனத்தின் 19 ஆவது ஆண்டான இன்று 

அந்த பிரகடனம் நிறைவேற்றப்பட வேண்டுமென மாணவர்களால் மீள் வலியுறுத்தப்பட்டது.இந்த நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக துறைசார் தரப்பினர்கள 

எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு