தமிழ் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டுக்குள் மறைந்திருந்த பயங்கர திருடர்கள்..! தட்டி தூக்கியது பொலிஸ்..

ஆசிரியர் - Editor I
தமிழ் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் வீட்டுக்குள் மறைந்திருந்த பயங்கர திருடர்கள்..! தட்டி தூக்கியது பொலிஸ்..

பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த பிரபல திருடர்கள் இருவர் தெல்லிப்பளை பகுதியில் பெண் பொலிஸ் உத்தியோகஸ்த்தரின் வீட்டுக்குள் மறைந்திருந்த நிலையில் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 சந்தேகநபர்கள் இருவரும் கொள்ளையிட்ட நகைகளை வவுனியாவில் விற்பனை செய்துள்ளமையை அறிந்து மானிப்பாய் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தனர்.இந்த நிலையில் அவர்கள் இருவரும் தெல்லிப்பளையில் உள்ள தமிழ் பெண் உத்தியோகத்தரின் வீட்டில் மறைந்திருப்பதாக 

பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அந்த வீடு இன்று நண்பகல் முற்றுகையிடப்பட்டு சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.வீட்டில் மறைத்துவைத்திருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடந்த இரு மாதங்களுக்கு மேலாக கடமைக்குச் சமுகமளிக்கவில்லை. 

அதனால் அவர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸார் கூறினர். சந்தேகநபர்கள் இருவரும் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு