காணி துப்புரவு செய்தபோது பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு..! அகற்றும் நடவடிக்கையில் பொலிஸார்..

ஆசிரியர் - Editor I
காணி துப்புரவு செய்தபோது பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு..! அகற்றும் நடவடிக்கையில் பொலிஸார்..

கிளிநொச்சி- கிருஷ்ணபுரம் பகுதியில் வெடிக்காத நிலையில் பெருமளவு வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் காணி உரிமையாளர் கனரக வாகதனத்தைக்கொண்டு தனது காணியினை துப்பரவு செய்து கொண்டிருந்தபோது 

இவ்வாறு வெடிக்காத நிலையில் காணப்பட்ட வெடி பொருட்களை அவதானித்தள்ளார். குறித்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசாரிடம் 

முறைப்பாடு செய்த காணிஉரிமையாளர், அதனை பாதுகாப்பாக அகற்றுமாறு தெரிவித்தள்ளார். இவ்விடயம் தொடர்பில் விசாரணை 

மேற்கொண்ட பொலிசார் கிளிநொச்சி நீதிமன்றின் அனுமதியுடன் விசேட அதிரடிப்படையினருடன் உதவியோடு அகற்றுவதற்கான 

நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு