சின்ன கதிர்காமர் தேர்தல் காலத்தில் பேசும் பேச்சு ! (VIDEO)

ஆசிரியர் - Admin
சின்ன கதிர்காமர் தேர்தல் காலத்தில் பேசும் பேச்சு ! (VIDEO)

சுயாட்சியை கோருகின்றோம் என்பதில் மாறுபட்ட கருத்தை பிரதிபலிக்காமல் தமிழ் மக்கள் தீர்மானமாக இருகின்றார்கள் என்பதை சொல்லிக்கொண்டே வந்திருக்கின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அந்த தீர்மானம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும் பிரதிபலிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், 

“எங்களுடைய உள்ளூரில் பலவிதமான கருமங்களை நிறைவேற்றிக்கொள்ள நாங்களே தெரிவு செய்கின்ற ஒரு சபையே உள்ளூராட்சி சபை. அதன் உண்மையான அர்த்தமும் அதுதான். இம்முறை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலானது தேசிய முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆகையினால் தமிழ் மக்கள் எவ்வாறு வாக்களித்தார்கள் என்ற கேள்வி உடனடியாக சர்வதேசத்தின் மத்தியில் எழும்.

பல தசாப்த காலமாக முன்வைக்கப்பட்டு வரும் சுயாட்சி என்ற விடயத்தில் தமிழ் மக்கள் உறுதியாக இருக்கின்றார்கள் என்பதை சர்வதேசத்திற்கு கூறும் ஒரு தேர்தலாக இந்த உள்ளூராட்சி சபை தேர்தல் இருக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அப்போதுதான் சர்வதேசம் எங்களை திரும்பி பார்க்கும். அத்துடன், புதிய அரசியல் அமைப்பு தொடர்பான மிகுதி வேலைதிட்டத்திற்கு பலத்தை சேர்க்கும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலத்தில் இவ்வாறும் ஊர் சுற்றும் காலத்தில் எவ்வாறும் பேசுகிறார்கள் இந்த சுமந்திரன் என்ற சின்ன கதிர்காமர் !!

NEWS: EeLam MPK BoYs !!

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு