இந்தியாவின் 87 வயது தீவிர ரசிகை சாருலதா படேல் காலமானார்.

ஆசிரியர் - Editor III
இந்தியாவின் 87 வயது தீவிர ரசிகை சாருலதா படேல் காலமானார்.

விராட் கோரியையும், ரோகித் தர்மாவையும் வியப்படைய செய்து, அவர்களை முத்தமிட்டு ஆசி வழங்கிய  87 வயதான சாருலதா படேல் உயிரிழந்துள்ளார்.

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சாருலதா படேல். 87 வயது பாட்டி இங்கிலாந்தில் சநித்து வந்த போதும் இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகராகவும் இருந்து வந்தார். இதனால் அவர் இங்கிலாந்தில் இந்திய அணி கலந்து கொள்ளும் எல்லா போட்டிகளையும் கண்டு களிப்பார். 

 இந்நிலையில், இந்திய அணியின் தீவிர ரசிகையான சாருலதா படேல் காலமானார். சாருலதா படேலின் மறைவுக்கு  பி.சி.சி.ஐ  இரங்கல் தெரிவித்து உள்ளது.  

கடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில்,  பர்மிங்காமில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி வங்காளதேசத்தை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. அந்த ஆட்டத்தை உற்சாகமாக கண்டுகளித்த ஆயிரக்கணக்கான ரசிகர்களில் வீல்சேரில் வந்திருந்த சாருலதா படேலும்  ஒருவர் ஆவார்.

மூச்சு விட தடுமாறும் வயதில் ‘தம்’ கட்டி ஊதுகுழலை ஊதியபடி, முகத்தில் மூவர்ண நிறத்தை தீட்டி கையில் தேசிய கொடியுடன் நமது வீரர்கள் ரன் அடித்த போதும், விக்கெட் வீழ்த்திய போதும் அவர் கொண்டாடிய விதம் சக ரசிகர்களை மட்டுமின்றி வீரர்களின் கவனத்தையும் ஈர்த்தது. அது சமூக  வலைதளங்களிலும் புகைப்படங்களாக அதிகம் பகிரப்பட்டன.

ஆட்டம் முடிந்ததும் இந்திய கேப்டன் விராட் கோலியும், துணை கேப்டன் ரோகித் சர்மாவும் சாருலதா படேலை சந்தித்து ஆசி பெற்றனர். மூதாட்டி, அவர்களுக்கு முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு