வடமாகாண மக்களின் பிரச்சினை என்ன..? ஆராய்வதற்காக இம்மாதம் யாழ்ப்பாணம் வருகிறார் ஐனாதிபதி..

ஆசிரியர் - Editor I
வடமாகாண மக்களின் பிரச்சினை என்ன..? ஆராய்வதற்காக இம்மாதம் யாழ்ப்பாணம் வருகிறார் ஐனாதிபதி..

வடமாகாண மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக இம்மாதம் நிறைவுக்குள் ஐனாதிபதி கோட்டபாய ராஐபக்‌ஷ யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

கொழும்பில் இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்தகமகே இதனை தெரிவித்தார்.

வடக்கு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கு தீர்வு வழங்குவது அரசாங்கத்தின் நோக்கமாகும். 

தோட்டப்புற மக்கள் மற்றும் வட மாகாண மக்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்துவது அரசாங்கத்தின் இலக்கு என்றும் அவர் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு