கொட்டடி கிராமத்திற்குள் நுழைந்து இரு இளைஞா்கள் மீது வாள்வெட்டு..! ரவுடிகளை அடித்து நொருக்கிய மக்கள், மோட்டாா் சைக்கிள்களை விட்டு ஓட்டம்..

ஆசிரியர் - Editor I

யாழ்.நகா் பகுதிக்கு அண்மையில் உள்ள கொட்டடி கிராமத்திற்குள் வாள்களுடன் நுழைந்து இரு இளைஞா்கள் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்திய ரவுடிகளை மக்கள் துரத்தி பிடித்து அடித்து நொருக்கியுள்ளனா். 

3 மோட்டார் சைக்கிள்களைக் கைவிட்டு கும்பல் தப்பிச் சென்றுள்ளது.இந்தச் சம்பவம் கொட்டடி வைரவர் கோவிலடியில் இன்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றது.

படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 3 மோட்டர் சைக்கிள்களில் வந்த ஏழுக்கு மேற்பட்டோர் அடங்கிய கும்பல் ஒன்றே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. 

அவர்கள் பொம்மைவெளியைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுவதாக கொட்டடி இளைஞர்கள் தெரிவித்தனர். வன்முறைக் கும்பல் கைவிட்டுச் சென்ற 3 மோட்டார் சைக்கிள்களும் 

கொட்டடியைச் சேர்ந்தவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு