முஸ்லிம் தீவிரவாதிகள் இப்போதும் இயங்குகிறாா்கள்..! எகிப்தில் உள்ள தீவிரவாத குழு தலைவன் தொடா்பில் அரசு கவனம் செலுத்தாமை ஏன்..?

ஆசிரியர் - Editor I
முஸ்லிம் தீவிரவாதிகள் இப்போதும் இயங்குகிறாா்கள்..! எகிப்தில் உள்ள தீவிரவாத குழு தலைவன் தொடா்பில் அரசு கவனம் செலுத்தாமை ஏன்..?

முஸ்லிம் தீவிரவாதிகள் நாட்டுக்குள் தொடா்ந்து இயங்கி வருவதாக கூறியிருக்கும் பொதுபலசேனா அமைப்பி ன் பொது செயலாளா் கலகொட அத்தே ஞானசார தேரா், இலங்கை ஆபத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளாா். 

மேலும் தீவிரவாதிகளை கட்டுப்படுத்தவும் விசாரணை செய்யவும் பொறிமுறையொன்றை புதிய அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரிவினைவாத குழுக்களின் தலைவராக எகிப்திலுள்ள யூசுப் அல் கர்தாவியுடன் தொடர்பிலுள்ள வெளிவிவகார அமைச்சின் அதிகாரி உட்பட பலர் மீது இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை 

என்ற அதிருப்தியையும் ஞானசார தேரர் இன்று வெளியிட்டுள்ளார்.உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட 

ஜனாதிபதி ஆணைக்குழு பலவிடமும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.அந்த வகையில் இன்றைய தினம் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான கலகொடஅத்தே ஞானசார தேரர் 

குறித்த ஆணைக்குழு முன்பாக முன்னிலையாகி சாட்சியமளித்தார்.இதனையடுத்து ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர், அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் நபர்களுக்கு எதிராக 

நடவடிக்கை எடுக்காத ஒவ்வொரு நிமிடமும் அவர்களினால் இலங்கைக்கு அனர்த்தமே ஏற்படும் என்ற எச்சரிக்கையை முன்வைத்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு