தமிழ் மக்களின் தேசிய தலைவன் பிரபாகரன் மட்டுமே..! செவிடனும், குருடனும் தேசிய தலைவன் அல்ல.. கருணா காட்டம்.

ஆசிரியர் - Editor I
தமிழ் மக்களின் தேசிய தலைவன் பிரபாகரன் மட்டுமே..! செவிடனும், குருடனும் தேசிய தலைவன் அல்ல.. கருணா காட்டம்.

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வே.பிரபாகரன் மட்டுமே தமிழ் மக்களின் தேசிய தலைவா். என வி.முரளிதரன்(கருணா) கூறியுள்ளாா். 

அம்பாறை – பாண்டிருப்பு பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கொண்டவாறு கூறினார்.

ங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், என்னை துரோகி என்று கூற ஒருவருக்கே உரிமை உள்ளது அது எங்களுடைய தேசிய தலைவர் அவருக்கு மாத்திரமே உள்ளது.

ஆனால் இறுதிவரை தலைவர் என்னை துரோகி என்று கூறவில்லை. சொல்லியிருந்தால் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருப்பேன். எனக்கும் தலைவருக்குமே தெரியும் என்ன பிரச்சனை என்று. 

இன்று பலர் அரசியற்கட்சி தலைவர்களை தேசிய தலைவர் என்று விழிக்கின்றனர்.தேசிய தலைவர் என்றால் தலைவர் பிரபாகரன் மாத்திரமே அது ஒரு வரலாற்று அத்தியாயம் அதை மீண்டும் உருவாக்க முடியாது. 

அங்கு இருந்துதான் நான் வந்தேன் இல்லையெனில் கருணாவை உங்களுக்கு தெரிந்திருக்க முடியாது.இப்போது இருக்கும் தமிழ் தலைவர்களை தூக்கி நிறுத்துவதற்கு நான்கு பணியாட்கள் வேண்டும் . 

அவர்களுக்கு காதும் கேட்பதில்லை கண் பார்வையும் இல்லை அவர்களைதான் நாங்கள் கும்பிட்டு கொண்டு இருக்கின்றோம்  என்று அவர் தெரிவித்தார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு