சஜித் அழகுசாதன பொருட்கள் விற்பனை நிலையத்தை தீ வைத்து கொழுத்தியவரே ரயில் முன் பாய்ந்து பலி..! பின்னணி வெளியானது..

ஆசிரியர் - Editor I
சஜித் அழகுசாதன பொருட்கள் விற்பனை நிலையத்தை தீ வைத்து கொழுத்தியவரே ரயில் முன் பாய்ந்து பலி..! பின்னணி வெளியானது..

யாழ்.பருத்துறை நகருக்குள் உள்ள சஜித் வா்த்தக நிலையத்தை தீ வைத்தக் கொழுத்திய நபா் கமரா மூலம் அடையாளம் காணப்பட்டு தேடுதல் நடத்தப்பட்ட நிலையிலேயே அவா் தனக்கு தானே தீ மூட்டிக் கொண்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கின்றாா். 

பருத்தித்துறை பன்னங்கட்டி பகுதியை சேர்ந்த ராஜசேகரம் ராஜசீலன் (வயது 32) என்பவரே அவ்வாறு தனது உயிரை மாய்த்துள்ளார். பருத்தித்துறை சந்தை கட்டட தொகுதியில் பான்சி கடையுடன் இணைந்த புடவை கடை ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ மூட்டி எரிக்கப்பட்டது. 

அதனால் கடையில் இருந்த சுமார் 50 இலட்ச ரூபாய் பெறுமதியான உடுபுடவைகள் மற்றும் பான்சி பொருட்கள் என்பன எரிந்து நாசமானது. குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிசார் , அருகில் இருந்த கடையின் CCTV கமரா பதிவுகளின் அடிப்படையில் 

எரிக்கபட்ட கடைக்கு அருகில் உள்ள மற்றொரு கடை உரிமையாளரே கடைக்கு தீ மூட்டி தப்பி செல்வதனை ஆரம்ப கட்ட விசாரணைகளின் கண்டறிந்துள்ளனர். அதன் அடிப்படையில் சந்தேகநபரை கைது செய்யும் நோக்குடன் நேற்றைய தினம் அவரது வீட்டுக்கு சென்ற போது, அவர் தலைமறைவாகி இருந்தார். 

அந்நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிசார் தீவிரப்படுத்தி இருந்தனர். அந்நிலையில் குறித்த சந்தேக நபர் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை. 6.30 மணியளவில் யாழில். இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தின் முன்பாக தனக்கு தானே தீ மூட்டியவாறு பாய்ந்து 

உயிரை மாய்த்துள்ளார்சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு