2 கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் இயக்கச்சியில் கிளிநொச்சி பெண் கைது..! போதைப் பொருள் கடத்தல்காாி என பொலிஸாா் சந்தேகம்..

ஆசிரியர் - Editor I
2 கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் இயக்கச்சியில் கிளிநொச்சி பெண் கைது..! போதைப் பொருள் கடத்தல்காாி என பொலிஸாா் சந்தேகம்..

கிளிநொச்சி- இயக்கச்சி பகுதியில் விசேட அதிரடிப்படையினா் நடாத்திய திடீா் சோதனையின்போது 2 கிலோ 100 கிராம் அளவுள்ள கேரள கஞ்சாவுடன் பெண் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளாா். 

இயக்கச்சி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக பெண் ஒருவர் நடமாடுவதாக பளை பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைத்த பொலிசார் 

மற்றும் விசேட அதிரடிப்படையினர் குறித்த பெண்னை பரிசோதித்த போது 2கிலோ 100கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் குறித்த பெண் பளை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு 

மேலதிக விசாரணையை பளை பொலீசார் மேற்கொண்டு வருவதுடன் முதற்கட்ட விசாரணையில் குறித்த பெண் கிளிநொச்சியை சேந்தவர் என பளை பொலீசார் கூறினார்.

குறித்த பெண் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்புடையவா் என பொலிஸாா் வலுவான சந்தேகம் வெளியிட்டிருக்கின்றனா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு