தாயாருடன் வைத்தியசாலைக்கு சென்று வீடு திரும்பிய சிறுமி மீது மோதிய காா்..! படுகாயமடைந்த நிலையில் மீண்டும் வைதியசாலையில்..

ஆசிரியர் - Editor I
தாயாருடன் வைத்தியசாலைக்கு சென்று வீடு திரும்பிய சிறுமி மீது மோதிய காா்..! படுகாயமடைந்த நிலையில் மீண்டும் வைதியசாலையில்..

தாயாருடன் வைத்தியசாலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய சிறுமி மீது காா் மோதியதில் படுகாயமடைந்த சிறுமி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். 

இச்சம்பவம் இன்று  காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது.சம்பவத்தில் எழுதுமட்டுவாழ் ஒட்டுவெளியை சேர்ந்த சி.யாசினி என்பவரே படுகாயமடைந்தவராவார்.

அம்மம்மாவுடன் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சென்றுவிட்டு பேருந்தில் திரும்பி ஒட்டுவெளிச் சந்தியில் இறங்கி புகையிரத தண்டவாளப் பகுதியில் வீதிக் கரையுடன் இருக்கும் 

வீட்டிற்கு செல்வதற்காக அம்மம்மாவை விட்டு விட்டு குறுக்காக வீதியை கடந்த போது கிளிநொச்சியில் இருந்து வந்த கார் மோதியதிலேயே சிறுமி படுகாயமடைந்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு