சஜித் அழகுசாதன பொருட்கள் விற்பனை நிலையத்தை பெற்றோல் ஊற்றி கொழுத்திய காடையா்கள்..! பருத்துறையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
சஜித் அழகுசாதன பொருட்கள் விற்பனை நிலையத்தை பெற்றோல் ஊற்றி கொழுத்திய காடையா்கள்..! பருத்துறையில் சம்பவம்..

யாழ்.பருத்துறை சந்தை தொகுதியில் உள்ள வா்த்தக நிலையம் ஒன்றுக்கு இனந்தொியாத நபா்கள் தீ வைத்து கொழுத்தியிருக்கின்றனா். இதனால் பல லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எாிந்து அழிந்துள்ளது. 

இச்சம்பவம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றதென சி.சி.ரி.வி. காணொளியை அடிப்படையாகக்கொண்டு பொலிஸார் குறிப்பிட்டனர்.

பருத்தித்துறை புதிய சந்தையில் உள்ள சஜித் பான்சி அன்ட் சூ மார்ட் என்ற கடைக்கே இவ்வாறு தீவைக்கப்பட்டுள்ளது.கடையின் கதவை உடைத்து பெற்றோல் ஊற்றப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது. 

தீவைத்துவிட்டு ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடும் காட்சி அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் சி.சி.ரி.வி. கமராவில் பதிவாகியுள்ளது.சம்பவ இடத்திலிருந்து இரண்டு பெற்றோல் கலன்கள் மீட்கப்பட்டுள்ளன. 

என பொலிஸார் தெரிவித்தனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு