மானிப்பாய், உடுவில் பகுதியில் இன்று அதிகாலை திடீரென இராணுவம், பொலிஸ் வீடு வீடாகச் சோதனை!

ஆசிரியர் - Admin
மானிப்பாய், உடுவில் பகுதியில் இன்று அதிகாலை திடீரென இராணுவம், பொலிஸ் வீடு வீடாகச் சோதனை!

யாழ்ப்பாணம் – மானிப்பாய், உடுவில் பகுதியில் இன்று அதிகாலை இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து தீவிர சோதனை நடவடிக்கை ஒன்று மேற்கொண்டனர்.

 வாகனங்களில் கொண்டு வந்து குவிக்கப்பட்ட இராணுவத்தினர் வீடு வீடாக சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.

“தேடப்படும் நபர்கள் யாராவது உள்ளனரா” என்று தேடி வருவதாக வீட்டு உரிமையாளர்கள் சிலரிடம் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். வீதியால் சென்றவர்களும் சோதனை செய்யப்பட்டே தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். 

இராணுவத்தினரின் திடீர் சோதனை நடவடிக்கையால் மக்கள் அச்சத்துடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு