முல்லைத்தீவு- வட்டுவாகலில் கோர விபத்து..! ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி, மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில்.

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவு- வட்டுவாகலில் கோர விபத்து..! ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி, மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில்.

முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வட்டுவாகல் பாலத்திற்கு அண்மையில், 11.01 இன்றையதினம் காலையில், மோட்டார் சைக்கிள் மற்றும், மற்றும் கடற்படையினரின் வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முல்லைத்தீவு - மல்லாவிப் பகுதியைச்சேர்ந்த, 32வயதான கே.ஜீவன் என்ற குடும்பஸ்தர் உயிரிழந்ததுடன், அவரின் மனைவியான ஜீ.வினுஜா படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் முல்லைத்தீவு காவல்துறையினர் இவ்விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு