தனியாா் பல்கலைகழகங்களை உருவாக்க ஜனாதிபதி ஆா்வம்..! இலவச கல்வி அப்படியே இருக்கும் என்கிறாா்..

ஆசிரியர் - Editor I
தனியாா் பல்கலைகழகங்களை உருவாக்க ஜனாதிபதி ஆா்வம்..! இலவச கல்வி அப்படியே இருக்கும் என்கிறாா்..

உச்சபட்ச தகுதிகளுடன் தனியாா் பல்கலைகழகங்கள் சிறந்த கல்வியை வழங்குமாக இருந்தால் இலங்கையில் தனியாா் பல்கலைகழகங்களை உருவாக்க முடியும் வசதியானவா்கள் வெளிநாடு களில் சென்று கல்வியை தொடரும் நிலை இருக்காது.

மேலும் வெளிநாட்டு மாணவா்களையும் உள்ளீா்ப்பு செய்ய முடியும். என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டுகருத்து தெரிவித்தபோதே 

அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் மார்க்கமாக உயர் கல்வித் துறையை மாற்ற முடியும். இலவசக் கல்வி இலங்கையில் சிறந்த மாற்றங்களை உருவாக்கியுள்ளது.அதனை நாம் எப்போதும் பாதுகாக்க வேண்டும்.

தனியார் துறையில் கற்பதற்கு பண வசதியுள்ளவர்கள், வெளிநாடுகளுக்கு செல்லாது உயர் கல்வியை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு