மகளின் தற்கொலை குறித்து மரண விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்க தாய் தீயில் எாிந்து தற்கொலை முயற்சி..! யாழ்.கொக்குவிலில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
மகளின் தற்கொலை குறித்து மரண விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்க தாய் தீயில் எாிந்து தற்கொலை முயற்சி..! யாழ்.கொக்குவிலில் சம்பவம்..

யாழ்.கொக்குவில் பகுதியில் மாணவி ஒருவா் தற்கொலை செய்து கொண்ட நிலையில், குறித்த மாணவியின் தற்கொலை தொடா்பில் பொலிஸாா் விசாரணை நடாத்திக் கொண்டிருக்கும்போது தாயாா் தற்கொலைக்கு முயன்ற நிலையில் பொலிஸாரால் காப்பாற்றப்பட்டுள்ளாா். 

கொக்குவில் இந்துக்கல்லுாாியில் உயிாியல் பிாிவில் கல்வி கற்கும் மகேஸ்வரன் கஜானி என்ற  மாணவி காதல் விவகாரம் காரணமாக துாக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டாா். குறித்த தற்கொலை தொடா்பாக நேற்று பொலிஸாா் விசாரணை நடாத்தியிருக்கின்றனா். 

இதன்போது உயிாிழந்த மாணவியின் தாயாா் வீட்டு அறைக்குள் திடீரென சென்று கதவை பூட்டியதுடன் தனக்கு தானே மண்ணெண்ணையை ஊற்றி தீ மூட்டியுள்ளாா். இதனையடுத்து கதவை உடைத்து தாயை தீ காயங்களுடன் காப்பாற்றிய பொலிஸாா், 

இறந்துபோன மகளையும், படுகாயமடைந்த தாயையும் ஒரு அம்புலன்ஸ் வண்டியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனா். இதேவேளை மாணவியின் மரணத்திற்கு காதல் விவகாரமே காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகின்றது. 


 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு