புத்தளம்- வனாத்தவில்லுவில் பாாிய தேடுதல்..! முஸ்லிம் பயங்கரவாதிகளின் ஆயுதங்கள் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாம்..

ஆசிரியர் - Editor I
புத்தளம்- வனாத்தவில்லுவில் பாாிய தேடுதல்..! முஸ்லிம் பயங்கரவாதிகளின் ஆயுதங்கள் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாம்..

பயங்கரவாதிகளின் ஆயுதங்கள் மறைக்கப்பட்டிருப்பதாக கூறி மூன்றாவது நாளாகவும் பாாிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனா். 

இந்நிலையில் இன்றும் குறித்த பகுதியில் தேடுதல் முயற்சி இடம்பெறும் என்று கூறப்படுகிறது.வண்ணாத்திவில்லு, 

லெக்டோவதை பகுதிகளில் சஹ்ரான் தலைமையில் ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுக்கான பயிற்சிகள் தீவிரவாதிகளுக்கு அளிக்கப்பட்டதாக 

ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் 2019ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அங்கு நடத்தப்பட்ட சோதனையில் ஆயுதங்கள், 

வெடிபொருட்கள் உட்பட இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்.இந்நிலையில் ஒரு வருடத்திற்குப் பின்னர் தற்போது அதே பகுதியில் மீண்டும் 

தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு