தங்கவேட்டை - 3 கப்டன்கள் உள்ளிட்ட 5 இராணுவத்தினர் கைது!

ஆசிரியர் - Admin
தங்கவேட்டை - 3 கப்டன்கள் உள்ளிட்ட 5 இராணுவத்தினர் கைது!

கிளிநொச்சியில், தங்கத்தை தேடி, சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்டது தொடர்பாக, இராணுவத்தைச் சேர்ந்த 3 கப்டன்கள், இரண்டு சிப்பாய்கள் என, ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.     

155ஆம் கட்டைப் பகுதியில் கடந்த 29ஆம் திகதி தங்கம் இருப்பதாகத் தெரிவித்து சிலருடன் இணைந்து இரகசியமாக JCB இயந்திரம் மூலம் தேடுதல் மேற்கொண்டதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

நீதிமன்ற அனுமதி இல்லாது மேற்கொள்ளப்பட்ட அகழ்வு தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று இராணுவ பொலிசாரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொள்கின்றனர். அகழ்வு மேற்கொள்ளப்பட்ட காணியானது விடுதலைப் புலிகளின் நிர்வாக சேவை அலுவலகம் அமைந்திருந்த காணி என்பதும், குறித்த காணி படையினர் வசமிருந்து விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு