விமானப்படை அடாத்தாக பிடித்திருக்கும் 400 மீற்றா் வீதியை மீள தாருங்கள்..! பாதுகாப்பு செயலருக்கு அவசர கடிதம்..

ஆசிரியர் - Editor I
விமானப்படை அடாத்தாக பிடித்திருக்கும் 400 மீற்றா் வீதியை மீள தாருங்கள்..! பாதுகாப்பு செயலருக்கு அவசர கடிதம்..

கட்டுவன்- மயிலிட்டி இடையிலான சுமாா் 400 மீற்றா் வீதியை மீள வழங்குமாறு யாழ்.மாவட்டச் செயலா் என்.வேதநாயகன் பாதுகாப்பு செயலருக்கு கடிதம் எழுதியுள்ளாா். நாடாளுமன்ற உறு ப்பினா் அங்கஜன் இராமநாதனின் பணிப்புக்கமையவே இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. 

மேற்படி 400 மீற்றா் நீளமான வீதியை திறப்பதற்கு யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத் தில் தீா்மானம் எடுக்கப்பட்டிருந்தது. இதற்கமையவே இந்த கடிதம் பாதுகாப்பு அமைச்சின் செ யலருக்கு யாழ்.மாவட்ட செயலா் கடிதம் எழுதியிருக்கின்றாா். 

மயிலிட்டிச் சந்தியிலிருந்து கட்டுவன் சந்தி வரையான மயிலிட்டி வடக்கு பகுதி விடுவிக்கப்பட்டு மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். எனினும் கட்டுவன் – மயிலிட்டி வீதியின் ஒரு பகுதி பாதுகாப்புப் படையினரால் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த வீதி பலாலி விமான நிலையம் மற்றும் மயிலிட்டித் துறைமுகத்துக்கான பிரதான வீதியாகக் காணப்படுகிறது.அதனால் பெரும்பாலான மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள நிலையில் பிரதான வீதிக்குப் பதிலாக தனியார் காணி ஊடான மாற்றுப்பாதையால் 

மக்கள் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.எனவே கட்டுவன் சந்தி தொடக்கம் மயிலிட்டிச் சந்திவரையான வீதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். என்று யாழ்.மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் 

தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு