தொப்புள் கொடியுடன் கிணற்றில் வீசப்பட்ட சிசு..! சடலமாக மீட்பு, புங்குடுதீவில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
தொப்புள் கொடியுடன் கிணற்றில் வீசப்பட்ட சிசு..! சடலமாக மீட்பு, புங்குடுதீவில் சம்பவம்..

யாழ்.புங்குடுதீவு பகுதியில் பாழடைந்த கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் சிசுவின் சடலம் ஒன்று மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸாா் கூறியுள்ளனா். 

பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் குறிப்பிட்டனர்.

குழந்தை பிறந்து 2 நாள்கள் இருக்கும். மீட்கப்பட்ட சடலத்தில் இருந்து தொப்புள் கொடியும் காணப்படுகிறது .கொலை செய்யப்பட்டு யூரியா பையில் சுற்றப்பட்ட நிலையில் 

சிசு கிணற்றில் போடப்பட்டுள்ளது.எனினும் யூரியா பையுடன் வேறு வேறாக கலண்ட நிலையில் நிலையில் சடலம் காணப்பட்டது .நேற்றுக் காலை அந்தப் பகுதிக்கு 

அருகில் உள்ள பற்றைக் காட்டுக்குள் சென்ற ஒருவர் துர்நாற்றம் வீசுவதை கண்டு கிணற்றை எட்டிப் பார்த்துள்ளார்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை தட அறிவியல் பொலிஸாரின் உதவியுடன் ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர் .சிசுவின் சடலம் தொடர்பில் புங்குடுதீவு 11ம் வட்டாரம் பகுதிக்கு 

பொறுப்பான மருத்துவ மாது மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உதவியுடன் புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . 

சிசுவின் தாயார் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் ..கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிசுவின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் 

பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது .

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு