சிறுமியின் கைகளை கட்டி முழங்காலில் இருத்தி கொலைவெறி தாக்குதல்..! இரு பெண்களும், சிறுமியின் தந்தையும் கைது..

ஆசிரியர் - Editor I
சிறுமியின் கைகளை கட்டி முழங்காலில் இருத்தி கொலைவெறி தாக்குதல்..! இரு பெண்களும், சிறுமியின் தந்தையும் கைது..

சிறுமியின் கைகளை கட்டி முழங்காலில் இருத்தி கொலை வெறியுடன் தாக்குதல் நடாத்திய இரு பெ ண்களையும், சிறுமியின் தந்தையையும் பொலிஸாா் கைது செய்துள்ளனா். 

குறித்த சம்பவம் கொட்டவெஹற பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து சிறுமியை பாதுகாப் பாக மீட்டிருக்கும் பொலிஸாா், சிறுமியை தாக்கிய இரு பெண்கள் 

மற்றும் சிறுமியின் தந்தை ஆகியோரை கைது செய்துள்ளனா். தாக்குதலுக்கு உள்ளான சிறுமி நிக்கவரெட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுமியின் சிறிய தாயும் அவரின் உறவினர் பெண் ஒருவருமே தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் இன்றைய தினம் நிக்கவரெட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு