ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுக்களே ஆட்கடத்தல்களுக்கு காரணம்..! அமைச்சா் டக்ளஸை கைது செய், ஈ.பி.டி.பி அலுவலகம் முன் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
ஈ.பி.டி.பி ஒட்டுக்குழுக்களே ஆட்கடத்தல்களுக்கு காரணம்..! அமைச்சா் டக்ளஸை கைது செய், ஈ.பி.டி.பி அலுவலகம் முன் போராட்டம்..

ஈழமக்கள் ஜனநாயக கட்சிக்கும் ஆட்கடத்தல்களுக்கும் தொடா்புகள் உள்ளதாகவும், அமைச்சா் டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்படவேண்டும். எனவும்கோாி ஈ.பி.டி.பி அலுவலகம் முன்பு இன்று காலை காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவுகள் போராட்டம் நடாத்தியுள்ளனா். 

இன்று காலை ஈடுபட்டனர்.இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட வேண்டும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தப்பட வேண்டும், கைது செய் கைது செய் ஈ.பி.டி.பியை கைது செய், ஆட்கடத்தல்காரன் டக்ளஸ் அரச ஒட்டுக்குழு,

தமிழரை அழிப்பதில் அரசுடன் இணைந்து தீவிரமாக செயற்பட்டது ஈ.பி.டி.பி, வவுனியாவில் காணாமல் போனவர்கள் மீது தாக்குதல் நடத்திய அத்தனை ஈ.பி.டி.பியினரையும் கைது செய், ஈ.பி.டி.பி என்ற துணை இராணுவக் குழுவே கடத்தலில் ஈடுபட்டவர்கள், ஆயிரத்திற்கும் 

மேற்பட்டவர்களை கிடத்திவிட்டு இப்போது எம்மிடம் வருகிறான் டக்ளஸ் போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபடடனர். குறித்த போராட்டம் நடைபெற்றபோது அங்கு இரு வாகனங்களில் பொலிஸார் வரவழைக்கப்பட்டு,

 ஈ.பி.டி.பி.கட்சி அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டது.மேலும் போராட்டக்காரர்களின் கோஷங்கள் கேட்காமல் இருக்க கடசி அலுவலகத்தின் வாயிலில் ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டு, சினிமாப் பாடல்கள் பெருத்த ஒலியில் ஒலிக்க விடப்பட்டன. இதனால் போராட்டத்தில் 

ஈடுபட்டவர்கள் சிறிது நேரத்தில் அங்கிருந்து வெளியேறினர்.மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கையில் இருந்த பதாகைகளை மர்மநபர் ஒருவர் பிடித்து பறித்தமையினால் அங்கு சிறிது நேரம் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதன்போது அங்கு நின்ற ஈ.பி.டி.பி.கட்சியின் 

உறுப்பினர்கள் குறித்த நபரை பிடித்து அங்கு பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு