வடகிழக்குக்கு வெளியே கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட தயார்..! கூட்டமைப்பு விரும்பினால் பேசலாம்..

ஆசிரியர் - Editor I
வடகிழக்குக்கு வெளியே கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட தயார்..! கூட்டமைப்பு விரும்பினால் பேசலாம்..

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகையை அதிகரிக்க, தமிழ்தேசிய கூட்டமைப்புடனும் பேச்சுவார்த்தை நடத்துவோம், தமிழ்தேசிய கூட்டமைப்பு எம்முடன் இணைய விரும்பினால் பேசலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் கூறியுள்ளார். 

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோகணேஷன் தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் ஜனவரி முதல் வாரத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் 

அரசியல் குழு கூடி தீர்மானிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.தமிழ் தேசிய கூட்டமைப்பு, வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே போட்டியிடும் சாத்தியம் பற்றி, தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அவர்கள் போட்டியிடுவதில் தமக்கு எந்தவித பிரச்சினைகளும் இல்லை.அதற்கான உரிமை அவர்களுக்கு இருக்கிறது. ஒருவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுவதற்கான விருப்பம் இருப்பின் 

அது தொடர்பில் எழுத்துபூர்வமாக அறிவிக்குமாக இருந்தால் குறித்த விடயம் தொடர்பிலும் தாம் ஆராயவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேஷன் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு