மே மாதம் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து சிவாஜிலிங்கத்திடம் விசாரணை..! பழிவாங்கும் படலம் வடக்கு நோக்கி..

ஆசிரியர் - Editor I
மே மாதம் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து சிவாஜிலிங்கத்திடம் விசாரணை..! பழிவாங்கும் படலம் வடக்கு நோக்கி..

கடந்த மே மாதம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் பயங்கரவாத குற்றத்தடுப்புப் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்திருக்கின்றனர். 

கடந்த மே மாதம் இடம்பெற்ற நிகழ்வொன்று தொடர்பில் அவரிடம் 5 மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அவரை பயங்கரவாத விசாரணைபிரிவில் முன்னிலையாகுமாறு நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் நேற்றைய தினம் மருத்துவ காரணிகளை முன்னிலைப்படுத்தி அவர் பயங்கரவாத விசாரணை பிரிவில் முன்னிலையாகியிருக்கவில்லை.

இந்தநிலையில் இன்றைய தினம் அவர் பயங்கரவாத விசாரணை பிரிவில் முன்னிலையாகி ஐந்து மணி நேர வாக்குமூலம் வழங்கியதாக எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு