வயதான தாயை தாக்கிய மகள்: நீதவான் கொடுத்த உத்தரவு?

ஆசிரியர் - Editor II
வயதான தாயை தாக்கிய மகள்: நீதவான் கொடுத்த உத்தரவு?

திருகோணமலை - உப்புவெளி பகுதியில் வயதான தாயொருவரை தாக்கிய மகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு திருகோணமலை நீதிமன்ற நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணொருவருக்கே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் தனது வயதான தாயொருவருடன் தினமும் சண்டையிடுவதாகவும், அவரை தாக்குவதாகவும் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த 28ஆம் திகதி மாலை பெண்ணை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து குறித்த நபரை பொலிஸார் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், அடுத்த மாதம் 19ஆம் திகதி மீண்டும் மன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு