நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை ஆசனங்கள் பெற தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கும்..! சுமா விருப்பம்.

ஆசிரியர் - Editor I
நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை ஆசனங்கள் பெற தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கும்..! சுமா விருப்பம்.

நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை ஆசனங்களை பெறுவதற்காக ஐக்கியதேசிய முன் னணிக்கு ஆதரவு வழங்க தமிழ்தேசிய கூட்டமைப்பு தயாராக உள்ளதாக அக்கட்சியின் நா டாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊர்காவற்றுறை கட்சி அலுவலகத்தில் கட்சி ஆதரவாளர்களிடம் பேசும் போது அதன் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்தக் கருத்தைத் தெரிவித்தார் என ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

வரும் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதிகப்படியான ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் உரிமைகளை வலுப்படுத்தும் முயற்சியில் 

ஐக்கிய தேசிய முன்னணிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என அவர் கூறினார்.வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் தயக்கமிக்க அணுகுமுறையை கடைப்பிடிக்காது 

என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு