பயங்கரவாத குற்றத்தடுப்பு பிாிவின் விசாரணைக்காக சென்ற குடும்பஸ்த்தரை காணவில்லை..! மனைவி வல்வெட்டித்துறை பொலிஸில் முறைப்பாடு..

ஆசிரியர் - Editor I
பயங்கரவாத குற்றத்தடுப்பு பிாிவின் விசாரணைக்காக சென்ற குடும்பஸ்த்தரை காணவில்லை..! மனைவி வல்வெட்டித்துறை பொலிஸில் முறைப்பாடு..

பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் விசா ரணைக்கு அழைக்கப்பட்டு கொழும்பு சென்ற குடும் பஸ்த்தரை காணவில்லை. என மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கடந்த 6ம் திகதி பயங்கரவாத குற்றத்தடுப்பு விசார ணைக்காக வல்வெட்டித்துறை கெருடாவில் பகுதியிலிருந்து பரமு விஜயகுமார் என்ற குடும்பஸ்த்தர் கொழும்பு சென்றுள்ளார். எனினும் அவர் நேற்றுவரை

வீடு திரும்பவில்லை. இந்நிலையில் அவருடைய ம னைவி வல்வெட்டித்துறை பொலிஸில் முறைப்பாடு செய் துள்ளார். இதனையடுத்து பொலிஸார் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவிடம் தெடர்பு கொண்டு 

கேட்டபோது அவர் வரவில்லை. என கூறியதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு