அதிகாலையில் வீட்டுக்குள் நுழைந்து இளைஞன் மீது துப்பாக்கி சூடு..! முல்லைத்தீவு- மல்லாவியில் சம்பவம்..!

ஆசிரியர் - Editor I
அதிகாலையில் வீட்டுக்குள் நுழைந்து இளைஞன் மீது துப்பாக்கி சூடு..! முல்லைத்தீவு- மல்லாவியில் சம்பவம்..!

முல்லைத்தீவு- மல்லாவி பகுதியில் இன்று அதிகாலையில் வீடொன்றுக்குள் புகுந்த இனந்தெரி யாதநபர்கள் இளைஞர் ஒருவர் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடாத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கின்றனர். 

மல்லாவி பொலிஸ் பிரிவுக்கு மங்கை குடியிருப்பு பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.மாட்டுப்பட்டி வைத்திருக்கும் 20 வயதுடைய சபேஷ் என்ற இளைஞன் மீதே 

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. சம்பவ தொடர்பில் இளைஞனிடம் விசாரணைகளை முன்னெடுத்தால்தான் மேலதிக தகவல்கள் தெரிய வரும்” என்று மல்லாவி பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு