பரந்தன்- புதுக்குடியிருப்பு இடையில் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிப்பு..! பாலத்தை அமைக்க பாடுபடும் இராணுவம்..

ஆசிரியர் - Editor I
பரந்தன்- புதுக்குடியிருப்பு இடையில் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிப்பு..! பாலத்தை அமைக்க பாடுபடும் இராணுவம்..

பரந்தன் புதுக்குடியிருப்பு வீதியில் வெள்ளத்தினால் உடைந்த பாலத்தை புனரமைப்பும் பணி கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், இந்த பாதை ஊடான போக்குவரத்து தொட ர்ந்தும் தடைப்பட்டிருக்கின்றது. 

பேருந்துகளில் பயணிக்கும் மக்களுக்கு மாற்று ஒழுங்குகள் செய்யப்பட்டிருக்கும் நிலையில் தனியார் வாகனங்களில் பயணிக்கும் மக்கள் வள்ளிபுனத்திற்கு அப்பால் செல்ல முடியாத நிலை உருவாகியிருக்கின்றது. 

இந்நிலையில் முல்லைத்தீவு செல்வோர் மாங்குளம் ஊடான பாதையை பயன்படுத்தலாம்.  மேலும் உடைந்த பாலத்தை புனரமைப்பதற்காக தொடர்ந்தும் இராணுவத்தினர் முயற்சித்து க் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு