இரண்டரை மாதம் நிரம்பிய குழந்தையை கிணற்றில் வீசி கொலை..! தாய், தந்தையிடம் பொலிஸார் தீவிர விசாரணை..

ஆசிரியர் - Editor I
இரண்டரை மாதம் நிரம்பிய குழந்தையை கிணற்றில் வீசி கொலை..! தாய், தந்தையிடம் பொலிஸார் தீவிர விசாரணை..

யாழ்.துன்னாலை பகுதியில் இரண்டரை மாதம் நிரம்பிய பச்சிளம் பாலகனை கிணற்றில் வீசி கொலை செய்த நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.

இரவு 11.30 மணியளவில் துன்னாலை குடவத்தைப் பகுதியில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர் .தந்தையார் இரவு கடமைக்காக சென்றிருந்த நிலையில் 

தாயாருடன் பாலகன் உறங்கியுள்ளான். இந்த நிலையில் பாலகனை நேற்றிரவு 11.30 மணி முதல் காணவில்லை என்று தாயார் பொலிஸில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இன்று காலை கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட பாலகனின் சடலம் மந்திகை மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

உடற்கூற்று விசாரணையின் பின்னரே உண்மை துலங்கும் என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நெல்லியடிப் பொலிஸார், 

தந்தையையும் தாயாரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்துள்ளனர். மேலதிக விவரம் எதிர்பார்க்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு