7 மாடுகளை திருடி கொலை செய்து இறைச்சியை கடத்திய நபர் கைது..! யாழ்.தீவகத்தில் மீண்டும் திருட்டு தொடங்கியது..

ஆசிரியர் - Editor I
7 மாடுகளை திருடி கொலை செய்து இறைச்சியை கடத்திய நபர் கைது..! யாழ்.தீவகத்தில் மீண்டும் திருட்டு தொடங்கியது..

யாழ்.தீவக பகுதிகளில் இருந்து இறைச்சிக்காக மாடுகளை கடத்தும் சம்பவங்கள் மீள அதிக ரித்திருக்கும் நிலையில், இன்று காலை மாட்டிறைச்சியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஊர்காவற்றுறை பொலிஸ் அதிகாரி விவேகானந்தராஜ் தலமையிலான குழு மாட்டிறைச் சி கடத்தல்காரர்களை கைது செய்துள்ளது. 

புங்குடுதீவு 3ம் வட்டாரத்தில் மக்களுடைய 7 மாடுகளை திருடி இறைச்சிக்காக வெட்டி, அதனை சுழிபுரம் பகுதியில் உள்ள இறைச்சி வியாபாரி ஒருவருக்கு எடுத்து சென்றபோதே 

கடத்தல்காரன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹயஸ் வாகனமும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

மேலும் கைது செய்யப்பட்டவரிடம் நடத்தப்பட்ட விசாரணை அடிப்படையில் கள்ள மாடு கள் வெட்டிய இடத்தை முற்றுகையிட்டு சோதனையும் நடாத்தப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு