நாங்கள் வந்துவிட்டோம்..! இனிமேல் தமிழர்களுக்காக ஆடாதீர்கள்.. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு எச்சரிக்கை.

ஆசிரியர் - Editor I
நாங்கள் வந்துவிட்டோம்..! இனிமேல் தமிழர்களுக்காக ஆடாதீர்கள்.. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு எச்சரிக்கை.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அலுவலகத்திற்கு கொச்சை தமிழில் எழுதப்பட்ட அனாமதேய எச்சரிக்கை கடிம் ஒன்று அனுப்பவைக்கப்பட்டிருக்கின்றது. 

இது தொடர்பாக ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம், ஒட்டுசுட்டான் இராணுவ முகாம் விவகாரம், புத்தர் சிலை அகற்றல், 

பௌத்தத்திற்கு எதிராக செயற்படல் ஆகிய விவகாரங்களில் தமக்கு எதிராக செயற்பட்டதாகவும், இனிமேல் அது நடைபெறாது என்றும் தாங்கள் வந்து விட்டதாகவும் இனிமேல் எல்லாமே தாங்கள்தான் எனவும் 

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.கொச்சைத் தமிழில் அந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு