விளையாடிக் கொண்டிருந்தபோது கிணற்றில் விழுந்த 4வயது சிறுவன்..! சடலமாக மீட்பு, காலையில் சம்பவம்..

திருகோணமலை- மணவெளி பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருக்கின் றான. இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்ட சிறுவனின் சடலம் திருகோணமலை பொது ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. அத்தோடு குறித்த சம்பவம் தொடர்பிலான
மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.