ஹிஷ்புல்லாவின் பல்கலைகழகத்திற்கு ஆப்பு..! அரசுடமையாக்குமாறு ஜனாதிபதி அதிரடி உத்தரவு..

ஆசிரியர் - Editor I
ஹிஷ்புல்லாவின் பல்கலைகழகத்திற்கு ஆப்பு..! அரசுடமையாக்குமாறு ஜனாதிபதி அதிரடி உத்தரவு..

பாரிய சர்ச்சைகளை உண்டாக்கிய கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஷ்புல்லாவி ன் ஷர்யா பல்கலைகழகத்தை அரசுடமை ஆக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச உயர்கல்வி அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சவூதி அரேபியாவின் அமைப்புக்களின் நிதியுதவியுடன் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவினால் மட்டக்களப்பில் இந்த ஷர்யா பல்கலைக்கழகம் நிர்மாணிக்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்திற்கு எதிராக பலவழிகளிலும் 

எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்ட போதிலும் அரசுடமையாக்குவதற்கு இடமளிக்க முடியாது என்ற நிலைப்பாட்டில் ஹிஸ்புல்லா தொடர்ந்தும் இருந்துவந்தார்.இந்த நிலையிலேயே மேற்படி பல்கலைக்கழகத்தை அரச பல்கலைக்கழகமாக 

மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உயர்கல்வி அமைச்சின் அதிகாரிகளை நேற்று சந்தித்த ஜனாதிபதி பணித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு